குருணாகல் எரிபொருள் நிலையத்தில் இளைஞரை தாக்கிய குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், விசாரணைகள் முடியும் வரை அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவிக்க இராணுவம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவரை காலால் உதைத்து தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி கண்டனங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.