Home செய்திகள் சுவிஸ் நாட்டு தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

சுவிஸ் நாட்டு தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

சுவிஸ் நாட்டு தூதுவருடன்

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் வர்கலர் மன்றும் அரசியல் துறை செயலாளர் சிடோனியா கபிரியல் அம்மையார் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

கொழும்பில் தூதரகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்கள் கோ. கருணாகரம், வினோ நோகராதலிங்கம் மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் சுவிஸ் நாட்டு தூதுவருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் தற்போதுள் அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

Exit mobile version