“என்னால் மலைகளைப் பார்க்க முடியவில்லை, நிலத்தைப் பார்க்க முடியவில்லை, இந்தோனேசிய படகுகளை மட்டுமே காண முடிந்தது.
அவர்கள் (ஆட்கடத்தல் முகவர்கள்) செயற்கைக்கோள் அலைப்பேசிகள் வழியாக வங்கதேசத்திலிருந்த முகவர்களை தொடர்பு கொண்டனர்.
பிறகு நான் உள்பட 99 ரோஹிங்கியாக்களை இந்தோனேசிய மீன்பிடி படகுக்கு மாற்றினார்கள். அவர்கள் எங்களுக்கு உணவு, குடிக்க தண்னீரை உள்ளிட்டவற்றை வழங்கினார்கள்” என்கிறார் வங்கதேசத்திலிருந்து படகு வழியாக வெளியேறி இந்தோனேசியாவில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா அகதி.