Home செய்திகள் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்

பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்

பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில்

பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது பெண்கள் சிறுவர்களின் உரிமையை பாதுகாத்தல், அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களும் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து குறித்த போராட்டக்குழுவினர் ஏ9 வீதி ஊடாக மாவட்ட செலகம் வரை சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version