Home செய்திகள் கிராம உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறையால் மக்கள் பாதிப்பு

கிராம உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறையால் மக்கள் பாதிப்பு

IMG 20240506 WA0012 கிராம உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறையால் மக்கள் பாதிப்புகிராம உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறை காரணமாக பொது மக்கள் தினமாகிய இன்று பொது மக்கள் ஏமாற்றத்துடன் வீடு சென்றனர் .

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து, இன்று (06) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதை அடுத்தே, இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது.தம்பலகாமம் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களும் சுகயீன விடுமுறையினை முன்னெடுத்துள்ளனர். கிராம உத்தியோகத்தர்களை சந்திக்க தூர பிரதேசங்களில் இருந்து பிரதேச செயலகத்துக்கு சேவை பெற சென்ற மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Exit mobile version