Home செய்திகள் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறை

மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறை

IMG 20240506 WA0006 மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறைபத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பயன்பெறும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறை நேற்று திருகோணமலை நகரசபை வளாகத்தில் உள்ள நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் அவர்கள் ஆரம்பித்து வைக்க இவ்வமர்வை வளவாளர் கணேஷ் அவர்கள் சிறப்பான முறையில் நடத்தினார்.

இந்த அமர்வினை பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பணிப்பாளர் அஜித் குமார் உதயகுமார், ஆசிரியை செல்வி.டிலக்ஷிகா புகழ் வேந்தன் மற்றும் அறநெறி ஆசிரியை ஜெயவதணி இளங்கோவன் ஆகியோரால் ஒருங்கிணைப்பு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version