Tamil News
Home செய்திகள் 41 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் தனிக் குழுவாக அமர அனுமதி கோரியுள்ளனர்

41 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் தனிக் குழுவாக அமர அனுமதி கோரியுள்ளனர்

41 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில்

இலங்கை அரசாங்கத்தில் இருந்து தம்மைச் சாராத 41 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, பாராளுமன்றத்தில் தனிக் குழுவாக அமர சபாநாயகரிடம் அனுமதி கோரியுள்ளது.

அரசாங்க அல்லது எதிர்க்கட்சி ஆசனங்களில் தனியான குழுவாக ஆசனங்களை ஒதுக்குமாறு இன்று சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 எம்.பி.க்கள், தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சைக் குழு மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தனியான குழுவாக அமரவுள்ளனர்.

இந்நிலையில், பாராளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

Exit mobile version