மலைத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவளிப் போராட்டம் 100 ஆவது நாளை கடந்துள்ளது. இதுவரையில் இலங்கை அரசு தனது ஆக்கிரமிப்பை கைவிடுவதாகவும், அந்த மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்துவதாகவும் எந்த வாக்குறுதிகளையும் வழங்கவுமில்லை, நடவடிக்கைகளை மேற்கொள்ளவுமில்லை.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் அந்த மக்களின் போரட்டத்தில் இன்று(24) கலந்துகொண்டு ஆதரவுகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.