Tamil News
Home செய்திகள் வெலிசறை கடற்படை வீரருக்கு பரிசோதனை!!

வெலிசறை கடற்படை வீரருக்கு பரிசோதனை!!

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய வவுனியாவை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரொனோ பரிசோதனைக்கான இரத்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 60 ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களிற்கு கோரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முகாமில் பணியாற்றும்வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் அண்மையில் வவுனியா மகாகச்சகொடி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்கு வருகைதந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த உத்தியோகத்தர் சுஜ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பனிமனையால் இரத்தமாதிரிகள் இன்றயதினம் பெறப்பட்டுள்ளது.

குறித்த இரத்தமாதிரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அவருக்கு கொரொனோ தொற்று இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மேற்கொள்ளபடவுள்ளமை குறிப்பிடதக்கது.

Exit mobile version