Tamil News
Home செய்திகள் வன்னியிலும், மட்டக்களப்பிலும் களம் இறங்குவோம்: மனோ கணேசன் அறிவிப்பு

வன்னியிலும், மட்டக்களப்பிலும் களம் இறங்குவோம்: மனோ கணேசன் அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் களமிறங்கப் போவதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.

அந்தக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாகத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பு, கம்பஹாவில் களமிறங்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version