Tamil News
Home செய்திகள் ராஜபக்‌ஷக்களுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கும் நோக்கம் ஐ.தே.க.வுக்கு இல்லை ; ரணில்

ராஜபக்‌ஷக்களுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கும் நோக்கம் ஐ.தே.க.வுக்கு இல்லை ; ரணில்

“ராஜபக்‌ஷ அரசுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கும் எந்தத் திட்டமும் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சிக்குத் துரோகம் இழைப்பவர்களுக்கு கட்சியில் இடம் வழங்க முடியாது. கட்சியின் யாப்பை மதித்து அனைவரும் செயற்பட வேண்டும். சவால்களைத் தாண்டி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே எமது நோக்கமாக இருக்கின்றது” என்றார்.

Exit mobile version