Tamil News
Home செய்திகள் மெல்பேர்னில் ஈழ அகதி ஒருவர் மரணம்!

மெல்பேர்னில் ஈழ அகதி ஒருவர் மரணம்!

ஈழத்தைச் சேர்ந்த  புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.
வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் SBS தமிழிடம் தெரிவித்தார்.
தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், Safe Haven Enterprise விசா(SHEV) கட்டுப்பாடுகளின் கீழ் Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Exit mobile version