Tamil News
Home செய்திகள் முள்ளிவாய்க்காலில் மலசலகூடத்திற்குள் சடலம்

முள்ளிவாய்க்காலில் மலசலகூடத்திற்குள் சடலம்

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இன்று உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவியிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இறந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கடந்த சில வாரங்களாக கிளிநொச்சியில் உறவினர் வீடொன்றில் தங்கியிருந்ததாக பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

இந்த நிலையில் யாருமில்லாத வீட்டில் குறித்த குடும்பத்தினரின் சடலம் இன்று மலசலகூடத்திற்குள் இருந்து உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

 

Exit mobile version