Tamil News
Home செய்திகள் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு.

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு.

வவுனியாவில் கடந்தவாரம் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்திருந்ததுடன், 47 குடும்பங்களை சேர்ந்த 157 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த அனர்த்தம் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 44 வீடுகளும், செட்டிகுளம் பிரிவில் 3 வீடுகளும், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் 7 வீடுகளும் என 54 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்த நிலையில் அவற்றின் புணரமைப்பிற்காக அனர்த்தமுகாமைத்துவ அமைச்சினால் வவுனியா மாவட்டசெயலகமூடாக 4 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதி அந்தந்த பிரதேச செயலகமூடாக பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Exit mobile version