Tamil News
Home செய்திகள் மார்ச் 2 இல் கலைத்தால் ஏப்ரல் 25 இல் தேர்தல்; ஆணைக்குழு தகவல்

மார்ச் 2 இல் கலைத்தால் ஏப்ரல் 25 இல் தேர்தல்; ஆணைக்குழு தகவல்

நாடாளுமன்றம் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டால், ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தமுடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 11ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை தேர்தல்கள் ஆணைக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்படலாம்.

அத்துடன், பொதுத் தேர்தலின் பின்னர் 9ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் மே மாதம் 12ஆம் திகதி நடைபெறும் எனவும் அறியமுடிகின்றது.

மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் எனச் சட்டமா அதிபரும் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Exit mobile version