Tamil News
Home செய்திகள் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி.யாவது அவமானம்: மைத்திரி

தேசியப் பட்டியல் மூலம் எம்.பி.யாவது அவமானம்: மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்துக்குச் செல்வது எனக்கு அவமரியாதை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவை பக்கமுன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்ற போதிலும் மக்களின் வாக்குகளில் நாடாளுமன்றத்துக்கு வரத் தான் தீர்மானித்துள்ளேன். தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எனக்கு அழைப்பு விடுத்தனர்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்துக்குச் செல்வது எனக்கு அவமரியாதை. பொலனறுவை மக்கள் தொடர்பாக எனக்கு பலத்த நம்பிக்கை உள்ளது” என்றார்.

Exit mobile version