Tamil News
Home செய்திகள் பொன்னாவெளி மக்களின் பிரச்சினையை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவேன் – அநுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு

பொன்னாவெளி மக்களின் பிரச்சினையை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவேன் – அநுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு

பூநகரி – பொன்னாவெளி மக்களின் பிரச்னைகளை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்த உள்ளதாக ஜே.வி.பி. தலைவா் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – பொன்னாவெளி அனைத்து மக்கள் ஒன்றிய பிரதிநிதிகள் கொழும்பில் வைத்து புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டத்துக்கு நேரடியாக வருகைதந்த ஜே.வி.பியினர் போராட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்திய நிலையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, “சுண்ணக்கல் அகழ்வு நடைபெற்றால் பல கிராமங்கள் அழிவடையும். கடல் நீர் உட்புகும். கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர வேண்டிவரும்” எனப் பல விடயங்களை அநுரகுமார திஸநாயக்கவின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இவற்றைக் கேட்டறிந்த அநுரகுமார பொன்னாவெளி மக்களின் பிரச்னைகளை வெளி உலகத்துக்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பாக பாராளுமன்றத்தில் இது தொடர்பாக வெளிப்படுத்து வதாகவும் போராட்டக்காரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் உறுதியளித்தார்.

Exit mobile version