Tamil News
Home செய்திகள் புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் கோரிக்கை

புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் நாடுகடந்த தமிழீழ அரசின் ஒரு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடையை நீக்குவது குறித்து அந்தக் குழுவினரிடம் இந்த வருட இறுதியில் நீதிமன்றம் சாட்சியம் கோரும் என்று “மோர்ணிங் ஸ்டார்” இற்கு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் வழக்கினை விசாரிக்கும் மேன்முறையீட்டு ஆணையத்தில் இந்த விடயம் இரகசியமாக விசாரிக்கப்பட வேண்டுமென அரச திணைக்களம் விருப்பம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஐரோப்பிய நீதிமன்றம் தமிழர் மீதான தடையை நீக்க வேண்டும் என்று  பிரித்தானியா உள்ளிட்ட, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

Exit mobile version