Tamil News
Home உலகச் செய்திகள் பிறேசிலில் இடம்பெற்ற தாக்குதலில் 11 பேர் பலி

பிறேசிலில் இடம்பெற்ற தாக்குதலில் 11 பேர் பலி

நேற்று (19) பிறேசிலின் வட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நிகழ்த்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறேசிலில் உள்ள பெலெம் நகர் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், ஆனால் தாக்குதலின் நோக்கம் தெரியவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாக்குதலாளிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும், ஒருவர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜி1 இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஆறு பெண்கள், ஐந்து ஆண்கள் அடங்குவதாகவும், உந்துருளி மற்றும் மூன்று வாகனங்களில் வந்த ஏழு பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version