Home செய்திகள் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிக்கு மீளவும் பணி வழங்கப்பட்டது எவ்வாறு

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிக்கு மீளவும் பணி வழங்கப்பட்டது எவ்வாறு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை வழிநடாத்தியவராகக் கருதப்படும் மேஜர் புலவத்த,சிறிலங்கா இராணுவத்தபதியின் நேரடி உத்தரவுக்கமைய மீளவும் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளார்.major prabath bulathwatte crop கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிக்கு மீளவும் பணி வழங்கப்பட்டது எவ்வாறு

குறித்த அதிகாரியின்கீழ் இயங்கிய குழவினர் தி நேசன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத் நொயரை தாக்கியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது தெரிவிக்கப்படுகிறது.

கீத் நொயா கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த மேஜர் புலவத்தகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபர் ஒருவருக்கு எவ்வாறு மீளவும் பணி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மனிதவுரிமை பற்றி உரத்துக் கூவுவோரும், ஊடகத்துறை சார்ந்தவர்களும் இவ்விடையத்தில் மௌனம் சாதிப்பது வியப்பளிப்பதாக உள்ளது.

Exit mobile version