Tamil News
Home உலகச் செய்திகள் பிரிட்டன் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

பிரிட்டன் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் மேற்கொண்டு பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளால் மருத்துவரின் அறிவுரைப்படி மருத்துவமனைக்குச் செல்வதாகவும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார். அவரது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version