Tamil News
Home செய்திகள் பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில்சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில்சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

நாமக்கல் -பரமத்திவேலுரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் அய்யாத்துரை என்கிற ஞானபிரகாசம் (வயது 65) என்ற நபர் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் குறித்த முதயவர்  வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற 11 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து தண்ணீர் கேட்டுள்ளார். சிறுமி தண்ணீர் கொடுத்தபோது,  சிறுமிக்கு ஞானபிரகாசம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்தி காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
அதன்பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவர் ஞானபிரகாசத்தை கைது செய்தனர். பின்னர் அவர் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Exit mobile version