Tamil News
Home செய்திகள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணையில் பங்கெடுக்க முடியாது-சிவாஜிலிங்கம்

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணையில் பங்கெடுக்க முடியாது-சிவாஜிலிங்கம்

நாளைய தினம்(27) பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணைப் பிரிவிற்கு சமுகமளிக்க முடியாதுள்ளது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக நாளைய தினம் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறும் போது, எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் எனது வைத்திய பரிசோதனை ஒன்றிற்காக செல்லவேண்டியிருப்பதால், விசாரணைக்கு சமுகமளிக்க முடியாதுள்ளது என்று கூறினார்.

Exit mobile version