Tamil News
Home செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கும் யாழ். மாநகரசபை மேயர்

நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கும் யாழ். மாநகரசபை மேயர்

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தான் களமிறங்கத் தயாராக உள்ளதாக யாழ். மாநகரசபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி தகவல்களைத் தெரிவித்தார்.

வடமாண சபை உறுப்பினராக இருந்த இமானுவேல் ஆர்னோல்ட் தனது பதவியை இராஜினாமா செய்து, மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு யாழ். மாநகரசபை மேயராகப் பதவியேற்றிருந்தார்.

இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் களமிறங்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், தேர்தலுக்கான திகதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version