Tamil News
Home செய்திகள் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் இன்று மாலை பாராளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டமூலத்தின் மீது வாக்கெடுப்பு கோரியதன் பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 48 எம்.பிகளும் எதிராக 7 எம்.பிகளும் வாக்களித்தனர். விவாதத்தில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டு, திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, தேசிய நீர்வரைவியல் சட்டமூலமும் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

Exit mobile version