Tamil News
Home செய்திகள் தேர்தல்கள் குறித்து பேச கட்சிகளுக்கு அழைப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்தது

தேர்தல்கள் குறித்து பேச கட்சிகளுக்கு அழைப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்தது

நாட்டில் வரவுள்ள தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இதன்படி, பதிவு செய்யப்பட்டுள்ள 80 அரசியல் கட்சிகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட கட்சி களின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழு தலைவரை அடுத்த வாரம் சந்திக்கஉள்ளனர்.

இந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், தேர்தல்கள், வாக்காளர் பதிவு தொடர்பிலான பிரச்னைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பு எதிர்வரும் 27 அல்லது மார்ச் 6ஆம் திகதி நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version