Tamil News
Home செய்திகள் தமிழ் அரசின் மத்திய குழு கிளிநொச்சியில் கூடுகின்றது – சட்ட சிக்கல் குறித்து ஆராயத் திட்டம்

தமிழ் அரசின் மத்திய குழு கிளிநொச்சியில் கூடுகின்றது – சட்ட சிக்கல் குறித்து ஆராயத் திட்டம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாட்டு விவகாரம் சட்டச் சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைள் குறித்து ஆராய்வதற்காக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கிளிநொச்சியில் கூடவுள்ளனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தசந்திப்பு நடைபெறவுள்ளது.

கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்கள் தற்காலிக தடையை கடந்த வியாழக்கிழமை விதித்தன.

இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் மத்திய குழு உறுப்பினர்கள் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பு மத்திய குழு கூட்டமாக அல்லாது உறுப்பினர்களின் சந்திப்பாகவே அமைகிறது. சட்ட ரீதியான பிரச்னைகள் எழலாம் என்பதற்காகவே மத்திய குழுவை உத்தியோகபூர்வ கூட்டமாக அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version