வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 21 ஆலயங்களில் ஏழு ஆலயங்களுக்கு மக்கள் சென்று வழிபாடு நடத்த இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 7 ஆலயங்களுக்கு பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளை பின்பற்றி வழிபாட்டில் ஈடுபட முடியும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆலய வழிபாடுகளுக்கு செல்ல விரும்புவோர் தமது பெயர், விலாசம், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறும் அந்த விவரங்களை ஆலயங்களின் நிர்வாகங்கள் மாவட்ட செயலகம், பிரதேச செயலகத்திடம் வழங்க வேண்டும்.
உயர் பாதுகாப்பு வலயத்தினுள் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இராணுவத்தினர் மட்டுமே மேற்கொள்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.