Tamil News
Home செய்திகள் தேரரின் காலம் கடந்த ஞானம்

தேரரின் காலம் கடந்த ஞானம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போது, ”தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறாகும். இதை நாம் இப்போதே உணருகின்றோம்.” என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தல்களை, ஆபத்தை  நாடு சந்திக்கவில்லை. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர்கள். அவர்களை அழித்தமை பெரும் தவறாகும் என்று கூறியிருக்கின்றார்.

இன்று தங்களை இனவாதிகள் என்று சிலர் கூறுவதாகவும், இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை விரைவில் மீட்டெடுப்போம் என்றும் கூறியதுடன், சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம், பறங்கியர்கள் ஆகிய அனைவரும் இங்கு சுதந்திரமாக வாழ போராடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version