Tamil News
Home உலகச் செய்திகள் தவறுதலான தாக்குதல் 19 கடற்படையினர் பலி

தவறுதலான தாக்குதல் 19 கடற்படையினர் பலி

ஈரான் கடற்படையினர் மேற்கொண்ட ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 பேர் காணமடைந்துள்ளனர்.

நேற்று (10) இடம்பெற்ற படைத்துறை ஒத்திகையில் கடற்படை கப்பல் ஒன்று கப்பல்களை தாக்கியழிக்கும் புதிய ஏவுகணை ஒன்றை செலுத்தியிருந்தது. எனினும் ஏவுகணை இலக்காக நிறுத்தப்பட்ட கப்பலை விடுத்து அருகில் நின்ற கப்பலை தாக்கியதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

ஓமான் வளைகுடாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சேதமடைந்த கப்பல் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஈரான் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version