Tamil News
Home செய்திகள் தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்க வேண்டும்: வலியுறுத்துகின்றார் வாசு

தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்க வேண்டும்: வலியுறுத்துகின்றார் வாசு

வடக்கில் உள்ளவர்கள் தமிழில் தேசிய கீதம் பாடுவதை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே தடுத்தார் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எஹலியகொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது என்பது சாதகமான நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் படுவது என்பது அரசமைப்பில் காணப்படுவதாகவும் மேலும் தமிழ் சமூகத்தினர் தங்களுக்கு விருப்பமான மொழியில் தேசிய கீதம் பாட ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version