இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சேவியர் குலநாயகம் போட்டியிடவுள்ளார் என்று அந்தக் கட்சியின் உயர்வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் பதவிக்கும் தேர்தல் மூலமே ஒருவர் தெரிவு செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில், தமிழரசு கட்சியின் சேவியர் குலநாயகமும் போட்டியிடவுள்ளார்.
தற்போது கட்சியின் தலைவராக சி.சிறீதரன் இருக்கிறார். இவர் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். எனவே, கட்சியின் மரபுப்படி, பொதுச் செயலர் பதவிக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால், பொதுச் செயலர் பதவியை பலர் கோருவதால் அதற்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், தமிழரசு கட்சியின் சேவியர் குலநாயகமும் பொதுச் செயலர் பதவியை கோருகிறார். எனவே, அவரும் பொதுச் செயலருக்கான தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார் என்றும் தெரியவந்தது.