சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி வரிச்சலுகை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரையிலும் நடைமுறையில் இருக்கும் ஆனால் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என சிறீலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை (04) ஏற்றுமதியாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
27 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரிச்சலுகை 2017 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்காவின் அரசு ஆட்சியில் இருந்தபோது வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த வரிச்சலுகையை பெறும் நாடுகளின் மனித உரிமை செயற்பாடுகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும், இந்த நிபந்தனைகள் மீறப்படும் சமயத்தில் சலுகை நிறுத்தப்படும் எனவும் டெனிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.