Tamil News
Home செய்திகள் சுரேன் ராகவனை புறக்கணித்தது கூட்டமைப்பு

சுரேன் ராகவனை புறக்கணித்தது கூட்டமைப்பு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட விரும்புவதாக வடமாகாணத்தின் முன்னள் ஆளுநர் சுரேன் ராகவன் விடுத்த வேண்டுகோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேட்பாளர்கள் தொடர்பான விபரங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு ராகவனிடம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்று (01) வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும் கூட்டத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அவர்களின் கடந்த நான்கு வருட செயற்பாடுகள் தொடர்பில் எம். ஏ சுமந்திரன் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version