Tamil News
Home செய்திகள் சிறீலங்காவுக்கு மேலும் 25 மில்லியன் டொலர்கள் கடன்

சிறீலங்காவுக்கு மேலும் 25 மில்லியன் டொலர்கள் கடன்

சிறீலங்காவின் அரச மருத்து நிறுவனத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடிகாலத்தில் மருந்து மற்றும் சுகாதாரப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது நாட்டில் உள்ள மக்கள் வங்கியின் உத்தரவாதத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறீலங்கா அரசுக்கு உலகின் பல நாடுகள் தற்போது உதவிகளை மேற்கொண்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version