Tamil News
Home செய்திகள் சிறிலங்கா விமானப்படையினர் நால்வர் உயிரிழப்பு

சிறிலங்கா விமானப்படையினர் நால்வர் உயிரிழப்பு

இன்று (31) அதிகாலை மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு சிறிலங்கா விமானப்படையினர் உயிரிழந்துள்ளனர்.

வரகாபொல பகுதியில் ஓட்டோ மற்றும் கொள்கலன் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓட்டோ சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வரகாபொல காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version