Tamil News
Home செய்திகள் சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் பயணமாகிறார்

சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் பயணமாகிறார்

சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் பயணமாகின்றார். எந்த நோக்கத்திற்காக செல்கின்றார் என அறியப்படாத நிலையில், சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்ப நிலையைக் கருத்திற் கொண்டு செல்கின்றார் என்பது தெரியவருகின்றது. இந்த அறிவித்தலை பிரதமர் செயலக வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ரத்துச் செய்யும் வரை அமைச்சரவைக் கூட்டங்களில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கும் இந்நிலையில், நாடாளுமன்ற தெரிவுக் குழுவை ரத்துச் செய்யப் போவதில்லை என்று ஐ.தே.க. உறுப்பினர்கள் அடம் பிடிக்கும் போது, ரத்துச் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதி பிரதம மந்திரி இருவருக்குமிடையிலான பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ரணில் விக்கிரமசிங்கவின் இந்த சிங்கப்பூர் விஜயம் அமைகின்றது. சிறிலங்கா அரசியலில் திடீர் திருப்பங்கள் சிலநாட்களில் ஏற்படக் கூடும் என நம்ப முடியும்.

Exit mobile version