Tamil News
Home செய்திகள் சனாதிபதி பொதுமன்னிப்பில் சிங்கள பௌத்த கடும்போக்கு தேரர் விடுதலை

சனாதிபதி பொதுமன்னிப்பில் சிங்கள பௌத்த கடும்போக்கு தேரர் விடுதலை

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார். பிற மதத்தவர் மீதான வன்முறைகள்,  நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஆறு ஆண்டுக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவர் சிறிலங்கா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

சனாதிபதி மன்னிப்பு தொடர்பான ஆவணங்களை சிறைச்சாலை திணைக்களம் இன்று (மே 23) பெற்றுக்கொண்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.டபிள்யூ.தென்னக்கோன் இன்று மாலை உறுதிப்படுத்தினார்.இன்று சனாதிபதி செயலாகத்தால்சிறைச்சாலைகள் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்புத் திணைக்களத்தின் தலைவர் தலதா அத்துகோரலவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த ஆவணங்கள் பின்னதாக சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப் பட்டிருந்தன.

Exit mobile version