Tamil News
Home செய்திகள் கொழும்பு கோள் மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகின்றது

கொழும்பு கோள் மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகின்றது

கொழும்பில் உள்ள கோள் மண்டலத்தை இன்று(17) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கிலேயே, இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் அருணு பிரபா பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், கோள் மண்டலத்தை மீண்டும் திறப்பதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அமுலிற்கு வரும் வகையில் 88 இரயில்வே சேவைகளை இரத்துச் செய்வதாக இரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version