Tamil News
Home செய்திகள் கொழும்பில் தற்காலிகமாகத் தங்கியிருப்போரின் விபரங்களைத் திரட்டும் பொலிஸ்

கொழும்பில் தற்காலிகமாகத் தங்கியிருப்போரின் விபரங்களைத் திரட்டும் பொலிஸ்

கொழும்பு மாவட்டத்தில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு மத்தி, வடக்கு, தெற்கு, நுகேகொடை மற்றும் கல்கிஸை பொலிஸ் பிரிவின் 17 பிரிவுகள், 60 கிராம சேவர்கள் பிரிவுகளில் தற்காலிமாகத் தங்கியிருக்கும் நபர்கள் தொடர்பில் கடந்த 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இதுவரை தற்காலிமாக தங்கிருக்கும் 37867 பேரின் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version