Tamil News
Home செய்திகள் கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவருக்கே எனது ஆதரவு – குமார வெல்கம

கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவருக்கே எனது ஆதரவு – குமார வெல்கம

ஜனநாயகத்தை மதிக்கும், கொலைகளை செய்யாத, கொலை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்காத மற்றும் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை பெறக் கூடியவரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பற்றி தற்போது எப்படியான கதைகளை கூறினாலும் இந்த வருடத்தின் இறுதியிலேயே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். அப்போது அதற்கு தகுதியான நபர் தெரிவு செய்யப்படுவார் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு மக்கள் தயார் என்றால் தானும் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோத்தபாய ராஜபக்ச தொடர்பாகவே குமார வெல்கம மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் குமார வெல்கம தொடர்ந்தும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version