Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனா – 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு  தடுப்பூசி செலுத்தும் பணி   இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்

கொரோனா – 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு  தடுப்பூசி செலுத்தும் பணி   இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்

இந்தியாவில் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சத்து 49 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் ஒரே நாளில் 354 பேர் பலியாகி உள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 62 ஆயிரத்து 468ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் திகதி ஒரே நாளில் 355 பேர் பலியான நிலையில், 3 மாதங்களுக்கு பின் மீண்டும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version