Tamil News
Home உலகச் செய்திகள் ”எங்களுக்கு ஒரே சுயநலம்தான் இருக்கிறது”- சீமான்

”எங்களுக்கு ஒரே சுயநலம்தான் இருக்கிறது”- சீமான்

“எங்களுக்கு ஒரே சுயநலம்தான் இருக்கிறது. மக்களின் நலன்தான் எங்கள் சுயநலம்’’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்த சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதைத் தொடர்ந்து சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில்,  சென்னை, விருகம்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் உரையாற்றுகையில்,

“எங்களுக்கு ஒரே சுயநலம்தான் இருக்கிறது. மக்களின் நலன்தான் எங்கள் சுயநலம். அவர்களின் எதிர்காலப் பாதுகாப்புதான் எங்கள் கனவு. நாங்கள் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதில்லை. ஏனென்றால் எங்களிடம் பணம் இல்லை. இருந்தாலும் நாங்கள் அளிக்கப் போவதில்லை. ஏனென்றால் எங்கள் கொள்கை அதுவல்ல.

கோடிகளைக் கொட்டுபவர்களை நம்ப வேண்டாம். அவர்கள் கோடிகளைக் கொட்டுகிறார்கள். நாங்கள் ஆகச் சிறந்த கொள்கைகளைக் கொட்டுகிறோம். நல்ல கருத்துகளை மக்களிடம் விதைத்துவிட்டால் தவறான அரசு உருவாகாது. உருவானாலும் அது நிலைக்காது” என்றார்.

Exit mobile version