Tamil News
Home செய்திகள் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையே பராமரிக்கும் – மஹிந்த உறுதி

கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையே பராமரிக்கும் – மஹிந்த உறுதி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன கலுதரகே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பிரசன்ன கலுதரகே மேலும் தெரிவித்தவை வருமாறு:

“கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான அறிவிப்பு இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். பிரதமர் எமக்கு வழங்கிய உறுதி மொழி இன்று நிறைவேற்றப்படும் என நம்புகின்றோம். இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரையில் நாம் தொழிற்சங்கப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியான பின்னர் தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்படும். அமைச்சரவைத் தீர்மானத்தில் வேறு விடயங்கள் இருந்தால் எமது தொழிற்சங்கப் போராட்டத்தைக் கைவிடமாட்டோம்” என்றார்.

Exit mobile version