Tamil News
Home செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி, வட-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால், மட்டக்களப்பு – காந்திபூங்காவில், ​இன்று 13/07/2019 கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் தொடர்ந்து தம்மை அரசாங்கம் ஏமாற்றிவருவதாகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
இறுதி யுத்ததின்போது, தமது பிள்ளைகளை கைகளினால் படையினரிடம் வழங்கியபோதிலும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இன்று தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லையெனவும் தம்மை அனைவரும் கைவிட்டதாக தாங்கள் உணர்வதாகவும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
Exit mobile version