Tamil News
Home செய்திகள் ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தினால் 100 குடும்பங்களுக்கு நிவாரனம்.

ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தினால் 100 குடும்பங்களுக்கு நிவாரனம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று பிரசித்திபெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினால் 100 குடும்பங்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வீடுகளில் இருந்து வரமுடியாது முடங்கிக் கிடக்கின்ற நிலையில் நாளாந்த கூலித்தொழில் செய்கின்ற பலர் தமக்கான நாளாந்த உணவு உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்குகின்ற நிகழ்வுகளை இன்றையதினம் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் முன்னெடுத்திருந்தனர்

அதனடிப்படையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னசாளம்பன் மற்றும் முத்துஐயன்கட்டு ஜீவநகர் பகுதிகளில் குறித்த நூறு குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொதிகளை கையளித்தனர் குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ. சத்தியசீலன் அவர்களும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version