Home செய்திகள் முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் போது மனித எச்சங்கள் மீட்பு – நீதிபதி நேரில் விசாரணை

முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் போது மனித எச்சங்கள் மீட்பு – நீதிபதி நேரில் விசாரணை

7 3 முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் போது மனித எச்சங்கள் மீட்பு - நீதிபதி நேரில் விசாரணைகிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்ட சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

கிளிநொச்சி பளைப்பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முகமாலைப்பகுதியில் நேற்றைய தினம் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று இனங்காணப்பட்டதையடுத்து பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் மாவட்ட நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த மனித எச்சம் மற்றும் மனித எச்ச இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் குறித்த பகுதியை கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும் கிடைக்கப்பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் தற்போது கிடைக்கப்பெற்ற மனித எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்தார்.

Exit mobile version