Tamil News
Home செய்திகள் ஈழத்தமிழர்கள் முகாம்க்களில் கொரோனாபரிசோதனை,துயர்துடைப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்-சீமான்

ஈழத்தமிழர்கள் முகாம்க்களில் கொரோனாபரிசோதனை,துயர்துடைப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்-சீமான்

ஈழத்தமிழர் முகாம்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

“தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஈழத்தமிழர் முகாம்களில் கொரோனா நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக சுகாதாரத்துறையின் மூலம் அனைத்து முகாம்களையும் ஆய்வுசெய்து ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் உடல்நலனை பரிசோதித்து, கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

அனைத்து முகாம்களிலும் கொரோனாவைத் தடுக்க போதிய பாதுகாப்பு வசதிகளை உருவாக்கித் தருவதுடன் முன்பரிசோதனை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும். மத்திய, மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து துயர்துடைப்பு உதவிகளும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.”

என அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க,இன்று 15.4.2020 சிவகங்கை தொகுதிக்குட்பட்ட காளையார்கோவில் ஒன்றிய நாம் தமிழர் உறவுகள் சார்பாக நாட்டரசன் கோட்டை கிராமம் கெளரிபட்டி பஞ்சாயத்தில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் 120 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் மற்றும் கபசுரக் குடிநீர் நாம்தமிழர் கட்சியினரால் வழங்கப்பட்டது.

Exit mobile version