Tamil News
Home செய்திகள் யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று

யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 12 பேரில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது.

12 பேரில் தந்தை மற்றும் 11, 7 வயதுகளையுடைய மகள்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். மற்றும் 5பேர் ஆண்களாவர். 7 பேர் அரியாலையைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்.

அரியாலை மதபோதகரின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என தெரிவித்து பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version