Tamil News
Home செய்திகள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் சடலம் வவுனியாவில் மீட்பு

இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் சடலம் வவுனியாவில் மீட்பு

இராணுவப் புலனாய்வுதுறை அதிகாரி ஒருவரின் சடலம் இன்று அதிகாலை வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியிலே 33 வயது மதிக்கத்தக்க இராணுவ அதிகாரியே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இப்பகுதியில் விசாரணை ஒன்றுக்காகச் சென்ற குறிப்பிட்ட அதிகாரி திரும்பி வராமையால், அவரைத் தேடிச் சென்ற போது இப்பகுதி கிணறு ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Exit mobile version